நைஜீரீயா:பெண்கள் தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலி!
![நைஜீரீயா:பெண்கள் தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலி!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2024/06/ni-2.avif)
நைஜீரியாவில் போகோ ஹராம் மற்றும் அதன் பிளவுக் குழுவான இஸ்லாமிய அரசு மேற்கு ஆப்பிரிக்கா மாகாணம் (ISWAP), போர்னோவில் மிகவும் தீவிரமான போராளி அமைப்புகளாகும். இது அயர்லாந்து பரப்பளவுடன் ஒப்பிடக்கூடிய பரந்த கிராமப்புறமாகும். 2014 இல், போகோ ஹராம் நகரைக் கைப்பற்றியது. 2015 இல் நைஜீரியப் படைகளால் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், பயங்கரவாத குழு நகருக்கு அருகில் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இது தாக்குதல்களில் பெண்களையும் இளைளர்களையும் தாக்குதலுக்காக அடிக்கடி பயன்படுத்துகிறது.தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் பெண்களும் குழந்தைகளும் பல ஆண்டுகளாகக் குழுவால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் சிலர் எனவும் நம்பப்படுகிறது. கிளர்ச்சி வலுவிழந்துவிட்டதாக நைஜீரிய ராணுவம் கூறினாலும், போராளிகள் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக தொடர்ந்து கொடிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நைஜீரியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் மாநில அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்துள்ளது.
நைஜீரியாவின் பர்னோ மாகாணம் குவாசா நகரில் திருமண நிகழ்ச்சி, இறுதி சடங்கு மற்றும் மருத்துவமனையில் தற்கொலைப்படையை சேர்ந்த பெண்கள் தாக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர், 48 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கருவுற்று இருந்த பெண்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் , இந்த சம்பவங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அந்நாட்டிலிருந்து வெளியாகும் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதில், முதல் குண்டுவெடிப்பு நேற்று மாலை 3 மணியளவில் திருமண நிகழ்ச்சியின்போது நிகழ்ந்தது. இது நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, குவோசாவில் உள்ள பொது மருத்துவமனையில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து இறுதிச்சடங்கு ஒன்றிலும் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இவை நைஜீரியாவில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.