துணை/ புதிய நகரம்-ஞாபகம் வருதே..!ஞாபகம் வருதே…!!

துணை/ புதிய நகரம்-ஞாபகம் வருதே..!ஞாபகம் வருதே…!!

அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக 1968-ல் இருந்த போது கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அவர் சென்னையின் பிரதான நகரை ஒட்டி உள்ள மற்ற பகுதிகளையும் புதிய நகராக உருவாக்க வேண்டும் என்று திட்டத்தை கொண்டு வந்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அப்போது அண்ணா நகர் உருவாக்கப்பட்டது. இந்த பகுதி அந்த நேரத்தில் செங்கல் சூளை நிறைந்த இடமாகவும், புதர்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது.இன்று சென்னையின் பிரமாண்ட நகரமாகவும், முதன்மையான நகரமாகவும் அண்ணா நகர் மாறி இருக்கிறது. அதை அடுத்து கலைஞ்ர் நகர் உள்படட சென்னையில் உருவாக்கிய அண்ணா நகர் போல எல்லா நகரங்களிலும் குறைந்த வருவாயினரும் வீடு கட்டி குடியிருக்கும் வகையில் நகரங்களை உருவாக்கினார்.

மேலும் சென்னைக்கு அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் இடையே 30,000 ஏக்கர்பரப்பளவில் துணை நகரம்அமைக்கப்படும் என 2006இல் முதல்வர் கருணாநிதி சட்ட சபையில் அறிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே திமுகவின் கூட்டணிக் கட்சியான பாமககடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இத்திட்டத்தால் 44 கிராம மக்கள் கடும்பாதிப்படைவர். எனவே இத்திட்டத்தை நிறைவேற்றக்கூடாது. மீறி நிறைவேற்றமுயன்றால் கிராம மக்களைதிரட்டி நானே போராட்டத்தில் குதிப்பேன் என பாமகநிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

இதற்கு ஒருபடி மேலே போன சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அடங்கிய செங்கல்பட்டுபாமக எம்.பியான ஏ.கே.மூர்த்தி, உயிரைக் கொடுத்தாவது இத்திட்டத்தை தடுப்போம்.திட்டம் தொடர்பாக கணக்கெடுக்க வரும் அதிகாரிகளை கட்டிப் போடுங்கள் என்றும்கிராம மக்களிடையே முழங்கினார். கூட்டணிக்கட்சியான பாமக இப்படி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் திமுக தரப்புஅதிர்ச்சி அடைந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான அதிமுகவும் இத்திட்டத்திற்குஎதிராக களத்தில் இறங்கியது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இத்திட்டத்தை மட்டுமல்லாது கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும்கடுமையாக விமர்சித்து அறிக்கை விட்டார். இந்த அறிக்கை சட்டசபையில் நேற்று பெரும் புயலைக் கிளப்பியது. இப்படி துணைநகரம் குறித்த சர்ச்சை வலுவடைந்த நிலையில் இத்திட்டம் கைவிடப்படுவதாகமுதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து 2006இல் கருணாநிதி ஸ்டேட்மெண்ட் இது:

திமுக தேர்தல்அறிக்கையிலும், நிதி நிலை அறிக்கையிலும் அறிவிக்கப்படடு, சென்னையை ஒட்டி துணைநகர அமைப்பு உருவாக்கப்படும் என சட்டசபையில் விதி எண் 110ன் கீழ்அறிவித்திருந்தேன்.இந்தத்திட்டம் கூட்டணிக் கட்சிகள், நல்லெண்ண அடிப்படையில் தெரிவித்திருந்தஅறிவுரையை சிந்தித்துப் பார்த்தும், சில சுய நல சக்திகள் திட்டமிட்டுள்ள பகிரங்கவன்முறை வெறியாட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியாகி விடக் கூடாது என்றமுன்னெச்சரிக்கை உணர்வுடனும் கைவிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

2011இல் சென்னை அருகே துணை நகரம் : ஜெயலலிதா அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா,சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும்110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்தார்.அவ்வறிக்கையில் இருந்து,சென்னை மாநகரம் வெகு வேகமாக விரிவடைந்து வருகிறது. சென்னையில் வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு ஒன்றை வாங்குவது என்பது கடினமானதாக உள்ளது.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, எல்லா தரப்பு மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும் வகையில் பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட உள்ள புதிய வீட்டு வசதித் திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

சென்னை-பெங்களுர் நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் 311.05 ஏக்கர் நிலம் உள்ளது.அந்த நிலத்திற்கு முறையான அணுகு சாலை அமைப்பதற்கு தேவைப்படும் 12.87 ஏக்கர் நிலம், நிலத்தின் உரிமையாளர்களிடம் உரிய கலந்தாலோசனை செய்து பெறப்பட உள்ளது.மேற்கண்ட நிலம் பெறப்பட்ட பின், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் 2160 கோடி ரூபாய் செலவில், 311.05 ஏக்கர் பரப்பளவில், செம்பரம்பாக்கம், குத்தாம் பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம் மற்றும் வெள்ளவேடு கிராமங்களை உள்ளடக்கிய “திருமழிசை துணைக்கோள் நகரம்”, அதாவது திருமழிசை சாடிலைட் டவுன்ஷிப் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் துணைக்கோள் நகரம், குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றும் வசதி, சாலைகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சமுதாயக் கூடம், பள்ளி, மருத்துவ மனை, பேருந்து நிலையம், பூங்கா, விளையாட்டுத் திடல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டு அமைக்கப்படும்.இந்த நகரத்தில் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகியோர் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வழங்கப்படும்.

சென்னை அசோக் பில்லர் அருகில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 3.73 ஏக்கர் நிலப்பரப்பில், வாரியத்திற்குத் தேவையான மர உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப் பெற்று, பின்னாளில் அந்தத் தொழிற்சாலை பயன்பாடு இன்றி போனதால், இந்த இடம் கடந்த சுமார் 15 ஆண்டுகளாக எவ்வித பயன் பாட்டிற்கும் உட்படாமல் இருந்து வந்தது.சென்னை மாநகரத்தில் வீட்டுத் தேவையை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள இந்த 3.73 ஏக்கர் நிலப்பரப்பில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 554 குடியிருப்புகள் கொண்ட பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு கிராமத்தில் 5.6 ஏக்கர் காலி நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வசம் உள்ளது. இந்த நிலம், சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்தை ஒட்டியும்; உள்வட்டச் சாலை முகப்பிலும் உள்ளது. தற்போது, இந்தக் காலி இடத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4.66 லட்சம் சதுர அடி பரப்பளவில், பன்னடுக்கு வணிக வளாகம் ஒன்று கட்டப்படும்.
மேலும், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.44 லட்சம் சதுர அடி பரப்பளவில் 120 குடியிருப்புகள் கட்டப்படும்.

2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பொன்விழா ஆண்டு ஆகும். பொன்விழா ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களின், மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 1 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 3 விழுக்காடாக உயர்த்தி வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் வசம் சென்னை, நந்தனத்தில் 15.78 மனை நிலம் உள்ளது. நந்தனத்தில் அலுவலகக் கட்டடங்களுக்கான தேவை உள்ளது. எனவே, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் வசம் தற்போது காலியாக உள்ள இடத்தில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில், பசுமைத் திட்ட அம்சங்களுடன், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், 17 மாடிகள் கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தக் கட்டடத்தை அலுவலகப் பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்’’

இப்படி அறிவித்தது அறிவிப்போடு அடங்கிப் போனது

இப்போது தென்னரசு சென்னை அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும்! என்று அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர்,”இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.. தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றும் விதமாக சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

மேலும் சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகரம் அமைக்கப்படும். இதில் ஐடி பார்க்குகள், பன்னடுக்கு கட்டிடங்கள், புதிய ஐடி நிறுவனங்கள், மெட்ரோ, உலக தர வசதி, புதிய நிறுவனங்கள், வெளிநாட்டில் இருப்பது போன்ற வசதிகளுடன் குளோபல் சிட்டி அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக தரமான வசதிகள் எல்லாம் இருக்கும் வகையில் இந்த சிட்டி அமைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

ஹூம்.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? என ஜனங்கள் வாய்விட்டு கிண்டல் அடிப்பதைக் கேட்க முடிவதுதான் சோகம்.!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!