ராகுல் காந்தியை கண்டுப் பிடிச்சித் தாங்கோ! – ஹைகோர்ட்டில் வழக்கு!

ராகுல் காந்தியை கண்டுப் பிடிச்சித் தாங்கோ! – ஹைகோர்ட்டில் வழக்கு!

தனக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்காததால் ராகுல் காந்தி கோபத்துடன் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியானது. ராகுலின் விடுமுறை குறித்து பா.ஜனதா கட்சியும் விமர்சனம் செய்தது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் இந்த முக்கியமான தருணத்தில், ராகுல் காந்தியின் விடுமுறை அறிவிப்பு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
rahul-gandhi_
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்து தரக்கோரி லக்னோ ஹைகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அமேதி தொகுதி எம்.பி. எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்து தரக்கோரி லக்னோ ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

எம்.பி.யின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பெருமையை காக்கவும் ராகுல் காந்தியை தேடிகண்டுபிடிக்க வேண்டியது மிகவும் தேவையானது. ராகுல் காந்தி சிறப்பு பாதுகாப்பில் உள்ளவர். மத்திய அரசிடம் முறையான தகவல் கொடுக்காமல் அவர் காமாணல் செல்லமுடியாது. எனவே ராகுல் காந்தியை கண்டுபிடிக்க மத்திய அரசுக்கு உத்திரவிட வேண்டும். என்று மனுதாரர் அசோக் பாண்டே கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!