k 13 படத்தில் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும்!

k 13 படத்தில் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும்!

நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான படம் கே 13. இப்படத்தில் இவருக்கு ஜோடியா ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து இருக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் கே-13 படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்து இருந்தது.விரைவில் இசை வெளியீட்டு விழாவுடன் கோடை விடுமுறையை ஒட்டி மே 1ல்  படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில் ;SP சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் இது குறித்து, “டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான். படத்தில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். இந்த டிரெய்லர் உளவியல் ரீதியாக ரசிகர்களை தயார்படுத்துவதற்கான ஒரு வழிமுறை தான். எங்கள் புத்திசாலித்தனமான ரசிகர்கள் டிரெய்லரின் உண்மையான இலக்கணத்தை புரிந்து கொண்டதும், அதில் முக்கிய கதாபாத்திரங் களை புரிந்து கொண்டதும், அதை பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடல்களை விரைவில் வெளியிடவும், இந்த கோடை விடுமுறையில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

நடிகர்களின் அபார நடிப்பை பற்றி SP சினிமாஸ் சாந்த பிரியா கூறும்போது, “தயாரிப்பாளர்கள் அருள்நிதியை பற்றி தொடர்ந்து புகழ்ந்து வருவதை பார்க்க செயற்கையாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை, இது ஒன்றும் புதிதல்ல. இன்று, சமூக ஊடகங்கள் மற்றும் வலை தளங்களில் பார்வையாளர்களிடமிருந்து வரும் பல கருத்துக்களில் அருள்நிதி முன்னணி கதா பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது தெளிவாகிறது. அவர் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட ஒரு நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். அவர் நடித்தால் அந்த திரைப்படத்திற்கு அதுவே பெரிய அளவில் வலு சேர்க்கிறது. இதனை ஒரு தயாரிப்பாளராக வெறுமனே சொல்லவில்லை, மக்கள் ஏற்கெனவே அவரை அங்கீகரித்து, பாராட்டியுள்ளனர்” என்றார்.

K13 ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சாம் சிஎஸ் அவரது பின்னணி இசையால் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளார். எஸ்.பி. சினிமாஸ் சார்பில் எஸ்பி சங்கர் மற்றும் சாந்தபிரியா தயாரிக்க இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பரத் நீலகண்டன். அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். இது ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு, கோடை விடுமுறையில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!