நயன்&விக்னேஷ் சிவன் வழங்கும் ’கூழாங்கல்’ படம் சோனி லிவ் -வில் ரிலீஸ் ஆயிடுடுச்சு!

நயன்&விக்னேஷ் சிவன் வழங்கும் ’கூழாங்கல்’ படம் சோனி லிவ் -வில் ரிலீஸ் ஆயிடுடுச்சு!

ல்ல, புதுமையான கதைக்களங்களை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், உலகம் முழுவதும் பார்வையாளர்களின் மனங்களைக் கவர்ந்த ‘கூழாங்கல்’ படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ’ரெளடி பிக்சர்ஸ்’ வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. அறிமுக இயக்குநர் வினோத்ராஜா இந்தப் படத்தை டைரக்ட் செய்துள்ளார். படத்தின் கதை தந்த அற்புதமான உணர்வை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இந்தத் திரைப்படத்தை பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியது ‘ரெளடி பிக்சர்ஸ்’ நிறுவனம்.

அந்த வகையில், ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை ’கூழாங்கல்’ வென்றது. இதுமட்டுமல்லாது, கடந்த 2022 இல் 94வது ஆஸ்கர விருதுகளுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக இந்தப் படம் இருந்தது மற்றும் அதே வருடம் இண்டிபெண்டண்ட் ஸ்பிரிட் அவார்டில் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் சிறந்த ஐந்து திரைப்படங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களில் அறுபதிற்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் தேர்வாகி முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ திரைப்படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜா இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விக்னேஷ் குமுளை மற்றும் ஜெய பார்த்தி இருவரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்க, ஞான் ஊட் மற்றும் சிஞ்சு கலை இயக்குநராகவும், கணேஷ் சிவா படத்தொகுப்பும் செய்திருக்கிறார். ஒலி வடிவமைப்பை எம்.ஏ. ஹரிபிரசாத் கவனித்து இருக்கிறார். கருத்தடையான், செல்லபாண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்த வந்த இயக்குநர் ராம்-க்கு நன்றி தெரிவித்துள்ள ’ரெளடி பிக்சர்ஸ்’ நயன்தாரா-விக்னேஷ்சிவன், இந்த அப்பா-மகன் பாசப்பிணைப்பு நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்படம் வெளியாவதை ஒட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன், “’ரெளடி பிக்சர்ஸ்’ என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது நாங்கள் எடுத்த முதல் படம் ‘கூழாங்கல்’தான். இயக்குநர் ராம் சார் என் குரு போன்றவர். அவர்தான் இந்தப் படம் குறித்து என்னிடம் கூறினார். இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கும் பிடித்திருந்தது. உலகளவில் பல திரைப்பட விருது விழாக்களில் பார்வையாளர்களுக்குத் திரையிட்ட போது அவர்களுக்குப் பிடித்திருந்தது.

எங்களுக்கு அதிக பெருமையை ஈட்டிக் கொடுத்தப் படம் இது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் முதல் படம் ஆஸ்கருக்கு தேர்வாகி இருந்ததன் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. அதேபோல, ஸ்பிரிட் அவார்டிலும் இந்தப் படம் நாமினேட் ஆனது. இப்படி பலவற்றை இந்தப் படம் சாதித்துக் கொடுத்தது. ‘கூழாங்கல்’ படத்தின் தயாரிப்பாளர் நான் என்பது பெருமை. இதை உருவாக்கிய இயக்குநர் வினோத்திற்கும், படத்தில் நடித்த கருத்தடையான், செல்லபாண்டி ஆகியோருக்கும் நன்றி.

பல திரைப்பட விருது விழாக்களுக்கு சென்ற பிறகே வெளியிட வேண்டும் என முடிவு செய்திருந்தோம். திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அதற்கான நேரம் தாண்டி போய்க் கொண்டே இருந்ததால் சோனி லிவ் ஓடிடியில் இப்போது வெளியிடுகிறோம். மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்களின் அறிமுகம் கிடைக்கவும் இந்தப் படம் உதவியது. இதை சாத்தியப்படுத்திக் கொடுத்த இயக்குநர் வினோத்திற்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்” என்றார்.

error: Content is protected !!